நெஞ்சை அள்ளிய சிலப்பதிகாரம் சிட்னியில் அரங்கேறுகின்றது!

admin
By admin
1 Min Read

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் முத்தமிழான இயல், இசை, நாடகம் என மூன்றையும் உள்ளடக்கியது. இப்பெருங்காப்பியத்தை மெல்பேணில் சிறப்பாக அரங்கேற்றிய பின்னர், எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி இரண்டு காட்சிகளை சிட்னியில் அரங்கேற்ற உள்ளனர்.

மூன்று மாநிலங்களில் இருந்தும் நாற்பத்தெட்டு கலைஞர்கள் இணைந்து, 80 இற்கும் மேற்பட்ட பாடல்களை இணைத்து சுமார் 2 மணி 45 நிமிடங்கள் காட்சியாக அரங்கேறுகின்றது.

இதில்பங்குபற்றும் கலைஞர்களில் மிகப் பெரும்பாலானவர்கள், மெல்பேர்ணின் இரண்டாம் தலைமுறைத் தமிழர்கள். யாவரும் சுத்தமான, இனிமையான தமிழ் பேசி, சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி பாராட்டை பெற்றவர்கள்.

உலகெங்கும் மீள் எழுச்சி பெற்று வரும் கூத்துக் கலைக்கு இந் நாடகம், மெல்பேர்ணின் மிக காத்திரமான பங்களிப்பாக அமைந்து நிற்கின்றது.

469672188 3885015361815634 119429508115948361 n 469666406 3885015935148910 5879345817034881750 n 469682523 3885015888482248 5752014507349641077 n 469596764 3885015555148948 4342853810276362974 n

480503691 1058341059658481 6623043187946778617 n

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *